தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தவான் மீண்டும் சதம்: தில்லி 164 ரன்கள் குவிப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2020, 3:44 pm

DIN


கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். கடந்த சில ஆட்டங்களாக சொதப்பி வரும் பிரித்வி ஷா இந்த ஆட்டத்திலும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Story image

கடந்த சில ஆட்டங்களாக பேட்டிங்கில் மிரட்டி வரும் தவான் இந்த ஆட்டத்திலும் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து முதல் ஓவரிலேயே மிரட்டத் தொடங்கினார்.

Story image

கேப்டன் ஷ்ரேயஸ் வழக்கம்போல் ஒத்துழைக்க பவுண்டரிகள் அடிப்பதை தவான் கவனித்துக் கொண்டார். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 8-க்கு மேல் இருந்தது.

Story image

இந்த நிலையில் முருகன் அஸ்வின் சுழலில் ஷ்ரேயஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதே ஓவரில் தவானும் அரைசதத்தைக் கடந்தார்.

Story image

காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் விளையாடாத ரிஷப் பந்த் களமிறங்கினார். அவர் துரிதமாக ரன் சேர்க்க திணறி வந்தார். எனினும், மறுமுனையில் தவான் இருந்ததால் தில்லிக்கு அவ்வப்போது பவுண்டரிகள் கிடைத்தன.

Story image

2 இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் கிளென் மேக்ஸ்வெல்லைப் பயன்படுத்தினார் ராகுல். அதற்குப் பலனாக பந்த் 14 ரன்களுக்கு (20 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸும் நேரம் எடுத்துக்கொள்ள தவான் ரன்களைக் குவித்து வந்தார். அவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் 9 ரன்களுக்கு ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். 

எனினும், கடைசி கட்ட அதிரடி பொறுப்பை ஏற்ற தவான் பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கினார். இதன்மூலம், 19-வது ஓவரில் அவர் சதமும் அடித்தார். 56-வது பந்தில் அவர் சதத்தை எட்டினார்.

ஷமி வீசிய கடைசி ஓவரில் 7 ரன்கள் கிடைக்க, ஹெத்மயர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார்.  

பஞ்சாப் தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளையும், நீஷம், அஸ்வின், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.