தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஐபிஎல் பாதுகாப்பு வளையம் என்றால் என்ன? பிரீத்தி ஜிந்தா விளக்கம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனையின் ராணியாகிவிட்டதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 அக்டோபர் 2020, 2:29 pm

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனையின் ராணியாகிவிட்டதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாபின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார். அவரும் அணி வீரர்களுடன் பாதுகாப்பு வளையத்தில் உள்ளார். 

பாதுகாப்பு வளையம் பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் விடியோ பதிவிட்டுள்ளார். அதில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அவர், தான் கரோனா பரிசோதனையின் ராணியாகிவிட்டதாகவும், இது தனது 20-வது கரோனா பரிசோதனை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த விடியோவுடன் பாதுகாப்பு வளையத்தின் அனுபவம் பற்றியும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

"ஐபிஎல் பாதுகாப்பு வளையம் என்றால் என்னவென்று என்னிடம் நிறைய பேர் கேட்டனர். பாதுகாப்பு வளையம் 6 நாள்கள் தனிமையில் தொடங்கும். 3 முதல் 4 நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதுதவிர அறையைவிட்டு வெளியே செல்லக் கூடாது. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு ஒதுக்கப்பட்ட விடுதிக்கும், உடற் பயிற்சிக் கூடத்திற்கும் மட்டுமே செல்ல வேண்டும். மைதானத்துக்கு நமது காரில்தான் செல்ல வேண்டும்.

ஓட்டுநர்கள், சமைப்பவர்கள் உள்ளிட்ட பலரும் பாதுகாப்பு வளையத்திலும் தனிமையிலும்தான் உள்ளார்கள். அதனால், வெளியிலிருந்து உணவு வாங்கக் கூடாது. யாருடனும் கலந்துரையாடக் கூடாது. என்னைப்போன்று சுதந்திரப் பறவையாக இருந்தால் இது மிகவும் கடினமானது. ஆனால், இது 2020. பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐபிஎல் நடைபெறுவதைப் பாராட்ட வேண்டும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.