தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழக வீரர் சுழலில் சிக்கியது தில்லி: வருண் 5 விக்கெட்டுகள்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் விளைவாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :24 அக்டோபர் 2020, 1:48 pm

DIN


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் விளைவாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா பேட்டிங்: நடு ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ராணா, நரைன்: கொல்கத்தா அணி 194 ரன்கள் குவிப்பு

தில்லி இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அஜின்கயா ரஹானே (0) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் பேட் கம்மின்ஸ். தனது அடுத்த ஓவரிலேயே தவான் (6) விக்கெட்டையும் வீழ்த்தினார் கம்மின்ஸ்.

இதையடுத்து, கேப்டன் ஷ்ரேயஸ் மற்றும் ரிஷப் பந்த் இணைந்தனர். இந்த இணை பாட்னர்ஷிப் அமைத்தாலும், பெரிதளவு அதிரடி காட்டவில்லை. இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 13-க்கு மேல் உயரத் தொடங்கியது. முதல் 10 ஓவர்களில் தில்லி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நிலையில், 12-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தியை அறிமுகப்படுத்தினார் மார்கன். முதல் ஓவரிலேயே பந்த் (33 பந்துகளில் 27 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார் வருண். மீண்டும் 14-வது ஓவரை வீசிய வருண், முதல் பந்தில் ஷ்ரேயஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார். ஆனால், அடுத்த பந்தில் ஷிம்ரோன் ஹெத்மயர் (10) விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு அடுத்த பந்தில் ஷ்ரேயஸ் (38 பந்துகளில் 47 ரன்கள்) விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மீண்டும் 16-வது ஓவரை வீசிய வருண் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸையும் (6), 5-வது பந்தில் அக்சர் படேலையும் (9) விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன்மூலம், நடப்பு சீசனில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

வருணின் ஓவர்களால் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.

19-வது ஓவரில் ககிசோ ரபாடாவும், கடைசி ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் வருண் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், பெர்குசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.