டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி.
அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாலும் ஐபிஎல்-லில் விளையாடும் வரை ஆர்சிபி அணியுடன் இணைந்திருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
2008-ல் யு-19 உலகக் கோப்பையை வென்ற பிறகு ஆர்சிபி அணிக்குத் தேர்வானார் விராட் கோலி. 2013 முதல் அந்த அணியின் கேப்டனாக உள்ளார்.
ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி சாதித்தது என்ன?
ஆர்சிபி கேப்டனாக விளையாடிய ஆட்டங்கள்
ஆட்டங்கள் - 132
வெற்றி - 62
தோல்வி - 66
முடிவு இல்லை - 4
ஆர்சிபி கேப்டனாக விளையாடிய ஆட்டங்களில் எடுத்த ரன்கள்
ரன்கள் - 4674
சராசரி - 43.27
ஸ்டிரைக் ரேட் - 134.11
சதங்கள் - 5
அரை சதங்கள் - 33
* 2016-ல் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
* இதுதவிர, 2015, 2020-ம் ஆண்டுகளில் ஆர்சிபி அணி ஃபிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது.
* கோலி தலைமையில் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.