கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

தோனியின் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த சீசனிலேயே பேசினோம்: பிளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த ஐபிஎல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தன்னிடம் பேசியதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:48 am

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த ஐபிஎல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தன்னிடம் பேசியதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை தோனி கடந்த வியாழக்கிழமை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சனிக்கிழமை எதிர்கொண்ட ஜடேஜா தலைமையிலான சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையடுத்து, தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது குறித்து அவர் விளக்கமளித்தார்.

பிளெமிங் கூறியதாவது:

"கேப்டன் பொறுப்பு குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். கடந்த ஐபிஎல் சீசனின்போது தோனி என்னிடம் பேசினார். ஆனால், எப்போது என்கிற நேரம் தோனியின் முடிவு. அணி மூலம் சீனிவாசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் 100 சதவிகிதம் அதைப் பற்றி பேசினோம். சிறிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிறிய மாற்றம் என்றாலும் அது நன்றாகவே நடந்து முடிந்தது" என்றார் பிளெமிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.