இந்திய முன்னாள் வீரர் சேவாக் தன்னுடைய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டதாக கேகேஆர் அணி வீரர் சுநீல் நரைன் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் மகத்தான வீரர்களில் ஒருவர் நரைன். 140 ஆட்டங்களில் விளையாடி 147 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 6.67.
இன்று தனது 150-வது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடும் நரைன் ஒரு பேட்டியில் சேவாக்கைப் பாராட்டிக் கூறியதாவது:
சுழற்பந்துவீச்சில் சிறப்பாக விளையாடும் வீரர் என சேவாக்கைக் கூறலாம். அவருக்குப் பந்துவீசுவது எனக்குக் கடினமாக இருந்தது. அணி எந்தச் சூழலில் இருந்தாலும் அவர் எப்போதும் போல அதிரடியாகவே விளையாடுவார் என்றார்.
ஐபிஎல் போட்டியில் நரைன் பந்துவீச்சில் 2 இன்னிங்ஸில் 12 பந்துகளை எதிர்கொண்ட சேவாக், 23 ரன்களை எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 191.66. 1 சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் நரைனின் 23 பந்துகளை எதிர்கொண்டு 33 ரன்களை எடுத்துள்ளார் சேவாக். 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்.
நரைனால் ஒருமுறை கூட சேவாக் விக்கெட்டை வீழ்த்த முடிந்ததில்லை.