நாடு திரும்பிய முஸ்தஃபிசூர்: சிஎஸ்கேவுக்கு பின்னடைவு?

வங்கதேசம் திரும்பியுள்ள முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சிஎஸ்கேவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு திரும்பிய முஸ்தஃபிசூர்: சிஎஸ்கேவுக்கு பின்னடைவு?

வங்கதேசம் திரும்பியுள்ள முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் அணியில் இடம்பெற்ற முஸ்தஃபிசூர், எதிரணியினரை தனது பந்துவீச்சால் திணறடித்து வருகிறார். கடினமான சூழலில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.

அணியின் டெத் பவுலராக பதிரனாவுடன் இணைந்து எதிரணியினர் கடைசி நேரத்தில் ரன்கள் குவிக்கும் யுத்தியை தகர்த்து வருகிறார். 7 விக்கெட்டுகள் கைப்பற்றி பவுலர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில், ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க விசா ஆவணங்கள் பணிகளுக்காக நேற்றிரவு வங்கதேசத்துக்கு திரும்பியுள்ளார்.

இதனால், சன் ரைசர்ஸ் அணியுடனான வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

நாடு திரும்பிய முஸ்தஃபிசூர்: சிஎஸ்கேவுக்கு பின்னடைவு?
தமிழகத்தில் ஏப்.9 முதல் 4 நாள்கள் மோடி பிரசாரம்!

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறுகையில், “வங்கதேசத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்காக கைரேகை வைக்கும் பணிக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்பியுள்ளார். நாளை(ஏப்.4) கைரேகை வைத்த பிறகு அவர் மீண்டும் இந்தியா திரும்பிவிடுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் அணியுடனான போட்டியை தவறவிடும் முஸ்தஃபிசூர் மீண்டும் அணியில் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com