எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மயங்க் யாதவின் ஓவரில் கவனமாக விளையாடுங்கள்: டேவிட் மில்லர்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொள்ள வேண்டுமென குஜராத் டைட்டன்ஸ் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

News image

மயங்க் யாதவ் - படம் | ஐபிஎல்

Updated On :7 ஏப்ரல் 2024, 4:44 pm IST

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொள்ள வேண்டுமென குஜராத் டைட்டன்ஸ் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

லக்னௌ அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான மயங்க் யாதவ், நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது பந்துவீச்சில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்பட பலரும் ரன்கள் குவிக்கத் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொள்ள வேண்டுமென குஜராத் டைட்டன்ஸ் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

டேவிட் மில்லர்

டேவிட் மில்லர் - படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மயங்க் யாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். அவருக்கு எதிராக எப்படி விளையாடப் போகிறோம் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவரது பந்துவீச்சை அடித்து அதிரடியாக விளையாட முடியுமென்றால், அடித்து விளையாடுங்கள். அவர் அதற்கும் மேலாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால், அவரது ஓவரில் ரன்கள் பெரிதாக குவிக்க முயற்சிக்காமல் கவனமாக கடந்து செல்வது நல்லது. மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ரன்கள் குவித்துக் கொள்ளலாம் என்றார்.

இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.