நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்: குமார் சங்ககாரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

News image

ஜோஸ் பட்லர்

படம் | ஐபிஎல்

Updated On :7 ஏப்ரல் 2024, 10:48 am

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

குமார் சங்ககாரா

குமார் சங்ககாரா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெள்ளைப் பந்து போட்டிகளில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களுக்கு அதிகம் கவனம் கொடுக்காமல் பட்லர் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்றையப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.