பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்: குமார் சங்ககாரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர் படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஜோஸ் பட்லர்
கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹார்திக் பாண்டியாவின் தவறல்ல: சௌரவ் கங்குலி

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

குமார் சங்ககாரா
குமார் சங்ககாராபடம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெள்ளைப் பந்து போட்டிகளில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களுக்கு அதிகம் கவனம் கொடுக்காமல் பட்லர் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்றையப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com