ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெள்ளைப் பந்து போட்டிகளில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களுக்கு அதிகம் கவனம் கொடுக்காமல் பட்லர் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்றையப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார் என்றார்.