எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தில்லி அணிக்காக அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்!

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இளம் வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

News image

ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் - படம் | ஐபிஎல்

Updated On :13 ஏப்ரல் 2024, 5:37 pm IST

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இளம் வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தில்லி அணியின் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அதிரடியாக அரைசதம் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் அதிரடியாக 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

கௌதம் கம்பீர் - 58* ரன்கள் - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக, 2008

ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் - 55 ரன்கள் - லக்னௌவுக்கு எதிராக, 2024

சாம் பில்லிங்ஸ் - 54 ரன்கள் - கொல்கத்தாவுக்கு எதிராக, 2016

பால் காலிங்வுட் - 53 ரன்கள் - கொல்கத்தாவுக்கு எதிராக, 2010

ஷிகர் தவான் - 52* ரன்கள் - ராஜஸ்தானுக்கு எதிராக, 2008

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.