எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | ஐபிஎல்
Updated On :13 ஏப்ரல் 2024, 4:00 pm

DIN

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வா டைடு மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். அதர்வா டைடு மற்றும் பேர்ஸ்டோ தலா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிரபசிம்ரன் சிங் (10 ரன்கள்), கேப்டன் சாம் கரண் (6 ரன்கள்) மற்றும் ஷஷாங் சிங் (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து, ஜித்தேஷ் சர்மா மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சற்று அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஜித்தேஷ் சர்மா 29 ரன்களிலும், லிவிங்ஸ்டன் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அஸுட்டோஷ் சர்மா 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் கேசவ் மகாராஜ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டிரண்ட் போல்ட், குல்தீப் சென் மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்க நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.