அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஷிகர் தவானுக்கு காயம்; பஞ்சாப் கிங்ஸுக்கு பின்னடைவா?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அடுத்த சில போட்டிகளில் விளையாடமாட்டார் என சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

News image

ஷிகர் தவான் - படம் | ஐபிஎல்

Updated On :14 ஏப்ரல் 2024, 3:43 pm IST

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அடுத்த சில போட்டிகளில் விளையாடமாட்டார் என பஞ்சாப் அணியின் இயக்குநர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் விளையாடாத காரணத்தால் அணியை சாம் கரண் வழிநடத்தினார்.

இந்த நிலையில், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த 7-10 நாள்கள் பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் இடம்பெறமாட்டார் என பஞ்சாப் அணியின் இயக்குநர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த சில நாள்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது. ஷிகர் தவானைப் போன்ற அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர் அணியில் இல்லாததது அணிக்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைய குறைந்தது 7-10 நாள்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இல்லாதபோது அணியை சாம் கரண் கேப்டனாக வழிநடத்துவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.