புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாடலாம்: ஆரோன் ஃபின்ச்

கேப்டன் பொறுப்பு இல்லாததால் எந்த ஒரு அழுத்தமுமின்றி ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாடலாம்.

News image

படம் | ஐபிஎல்

Updated On :16 மார்ச் 2024, 2:39 pm

DIN

கேப்டன் பொறுப்பு இல்லாததால் எந்த ஒரு அழுத்தமுமின்றி ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாடலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

மும்பை அணியை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்தவுள்ளார். இந்த நிலையில், ஆரோன் ஃபின்ச் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆரோன் ஃபின்ச்

ஆரோன் ஃபின்ச்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு அணியை கேப்டனாக நீங்கள் வழிநடத்தினால், எங்கு சென்றாலும் கேப்டனாகவே அறியப்படுவீர்கள். மும்பை அணியின் கேப்டன் என்ற பொறுப்பு தற்போது ரோஹித் சர்மாவுக்கு இல்லை. அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி எந்த ஒரு அழுத்தமுமின்றி சுதந்திரமாக விளையாடலாம் என்றார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தனது முதல் போட்டியில் , குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.