நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல் போட்டியைக் காண உதவி செய்யுங்கள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியைக் காண உதவி செய்யுங்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

News image

ரவிச்சந்திரன் அஸ்வின்

Updated On :18 மார்ச் 2024, 10:48 am

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.

போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. ஒரே நேரத்தில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. இதனால், ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார்களில் ஒருவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை அணியின் முதல் போட்டிக்கு டிக்கெட் பெற உதவி செய்யுமாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஐபிஎல் தொடரின் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுக்கானத் தேவை நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. எனது குழந்தைகள் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சிகள் மற்றும் முதல் போட்டியை நேரில் காண விரும்புகின்றனர். தயவு செய்து உதவி செய்யுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.