ஆர்சிபி அணியினர் சென்னை வந்தடைந்தார்கள்.
2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி சென்னையில் சேப்பாக் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.22) தொடங்குகிறது.
முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இதுவரை நடைபெற்ற 31 போட்டியில் சிஎஸ்கே 20 போட்டிகளில் வென்றுள்ளது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற 8 போட்டிகளில் 7 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் சென்னை வந்தடைந்தார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்கள் கோலி, டு பிளெஸ்ஸியை மிகவும் புகழ்ந்து வரவேற்றார்கள்.