பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் முதலில் பேட் செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக கோலி 77 ரனகள் அடித்து அசத்தினார். படிதார் 18, அனுஜ் ராவத் 11 ரன்கள் எடுத்தனர்.
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவையானபோது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார் தினேஷ் கார்த்திக். 2வது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை பதிவு செய்தார். 10 பந்துகளில் 28 ரன்கள் அடித்து வெற்றியை ஆர்சிபி பக்கம் திருப்பினார் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
சுருக்கமான ஸ்கோர் கார்டு:
விராட் கோலி-77,
டு பிளெஸ்ஸி- 3
கேமரூன் கிரீன் - 3,
ரஜத் படிதார் - 18,
க்ளென் மேக்ஸ்வெல்- 3,
அனுஜ் ராவத் - 11,
தினேஷ் கார்த்திக் - 28*,
மஹிபால் லோம்ரோர் - 17*
பஞ்சாப் பௌலிங்:
சாம் கர்ரன், ஹர்ஷல் படேல் தலா - 1 விக்கெட்
ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகள்
டி20 போட்டிகளில் 50க்கும் அதிகமான ரன்களை 100முறை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.