ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 162 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் விளையாடியது.
பஞ்சாப் கிங்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 ரன்களும், ஜோஸ் பட்லர் 38 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, க்ளென் பிலிப்ஸ் 25 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்கள், சாய் சுதர்ஷன் 13 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் விஜயகுமார் வைஷாக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுஸ்வேந்திர சஹால் இரண்டு விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
Summary
Batting first in the IPL match against Punjab Kings, the Gujarat Titans have scored 162 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











