பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் லக்னௌ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
காயம் காரணமாக இன்றையப் போட்டியில் கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நிக்கோலஸ் பூரன் அணியை வழிநடத்துகிறார். ஓய்வு அளிக்கப்பட்டுள்ளபோதிலும், கே.எல்.ராகுல் பேட்டிங்கில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.