மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரிஷப் பந்த் அதிரடி: சிஎஸ்கேவுக்கு 192 ரன்கள் இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது.

News image
ரிஷப் பந்த்- படம் | ஐபிஎல்
Updated On :31 மார்ச் 2024, 4:04 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். இந்த இணை தில்லிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 93 ரன்கள் சேர்த்தது. டேவிட் வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, பிரித்வி ஷாவுடன் கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும், பிரித்வி ஷா 43 ரன்களில் (4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, மார்ஷ் (18 ரன்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (0 ரன்) எடுத்து அடுத்தடுத்து பதிரானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். சிஎஸ்கே தரப்பில் பதிரானா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முஸ்தபிசூர் ரஹ்மான் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.