தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு 25% அபராதம்!

குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image

இஷாந்த் சர்மா..

Updated On :7 ஏப்ரல் 2025, 10:56 am

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியின் போது ஆட்டத்தின் நடத்தை விதிகளை மீறிய குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இஷாந்த் சர்மா அவர் மீதான லெவல் 1 குற்றத்தை ஒப்புக்கொண்டதால், கள நடுவரின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்லின் சட்டவிதிகள் 2.2-ன் படி, மைதானத்தில் இருக்கும் பொருள்கள் அல்லது கிரிக்கெட் உபகரணங்களை தேவையின்றி சேதப்படுத்துவதற்கு இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கும் இஷாந்த் சர்மா, 107 ரன்களை விட்டுக்கொடுத்து வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.