அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஐபிஎல்: சென்னையைப் பந்தாடிய மும்பை! 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது!

மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

News image
ரோஹித் சர்மா- படம் | ஐபிஎல் தளம்
Updated On :20 ஏப்ரல் 2025, 5:21 pm

DIN

மும்பை: வான்கடேவில் மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம் இன்றைய ஆட்டத்திலும் நீடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது.

ஐபிஎல் 38-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வான்கடே திடலில் எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் திரட்டியது. அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 32 பந்துகளில் 50 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 53 ரன்களும் குவித்தனர். அறிமுக வீரர் ஆயுஷ் மாத்ரே தன் பங்கிற்கு 15 பந்துகளில் 32 ரன்களை அதிரடியாக திரட்டியதால் சென்னை அணியால் மும்பைக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவும் சூர்யகுமார் யாதவும் வான்கடேவில் சிக்ஸர் மழை பொழிந்தனர். ரோஹித் சர்மா 76 ரன்களும்(45 பந்துகளில், 6 சிக்ஸர், 4 பௌண்டரி), சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள்(30 பந்துகளில், 5 சிக்ஸர், 6 பௌண்டரி) விளாச அந்த அணி 15.4 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏற்கெனவே 5 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள சென்னை அணிக்கு இது 6-ஆவது தோல்வியாகும். கடைசியாக லக்னௌவுக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை இன்று தோல்வி கண்டதால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.