ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்! - திலக் வர்மா

ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்று திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
திலக் வர்மா..
திலக் வர்மா..
Published on
Updated on
2 min read

ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கிறது என்று இந்திய டி20 கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரருமான திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறும் லீக் சுற்றின் 41-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் திலக் வர்மா தனியார் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் பேசுகையில், “கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்காக விளையாடும்போது, பயிற்சிக்காக ஓய்வறையில் இருந்து வெளியே வந்தேன். அப்போது ரசிகர்கள் எனது பெயரைக் கத்திக் கொண்டிருந்தார்கள். அது எனக்கே நம்பிக்கையில்லாத அனுபவம். ஆரம்பத்தில் ரோஹித் சர்மா என்னுடைய பின்னால்தான் வருகிறார் என நினைத்தேன். ஆனால், அவர்கள் எனது பெயரைக் கத்திக் கொண்டிருந்தனர். இது மிகவும் சிறப்புவாய்ந்த தருணம்.

நான் ரோஹித் சர்மாவுக்கும் சூர்யகுமார் யாதவுக்கும் அடிக்கடி சொல்வது ஒன்றுதான். நான் இன்னும் கோப்பை வென்ற உணர்வை அனுபவிக்கவே இல்லை. 2022 ஆம் ஆண்டில் மும்பை அணியில் சேர்ந்தேன். ஆனால், அதற்கு பிறகு நமது அணி கோப்பையை வெல்லவில்லை. என்னுடைய கடைசி மூன்று சீசன்கள் நன்றாக இருந்தன. ஆனாலும் அணிக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நாங்கள் முழு மனதோடு போராட தயாராக இருக்கிறோம்.

ஹார்திக் பாண்டியா உடன் நல்ல நட்புறவு இருக்கிறது. டி20 அறிமுகத்தின் போது அவரிடமிருந்து தொப்பியைப் பெற்றது மறக்கமுடியாத தருணம். கடந்த வருடமும் அவருடன் விளையாடினேன். அவர் எப்போதும் வீரர்களை ஊக்கப்படுத்துவார். ஏதேனும் தவறு நடந்தால் நேரடியாகவும் தெளிவாகவும் பேசுவார். நாங்கள் இருவரும் நல்ல புரிதலுடன் இருக்கிறோம்.

மேடையில் மட்டும் அல்லாமல் மேடைக்கு வெளியும் சூர்யகுமார் யாதவுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா எந்த நேரமும் மிக அமைதியாக இருப்பார். எதுவும் நடந்தாலும், அது முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளமாட்டார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 19-வது ஓவர் வீசும்போதும், வலைப் பயிற்சியில் பந்து வீசுவது போலவே இருந்தது. அந்த அமைதியை நான் மிகவும் பாராட்டுகிறேன், அதை நானும் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நான் 2022 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸில் சேர்ந்தேன். இது எனக்கு நான்காவது சீசன். பல மூத்த வீரர்களுடனும், உள்நாட்டு வீரர்களுடனும் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஐபிஎல்லில் சர்வதேச தரத்தில் இருக்கும் பலரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பிரெண்டன் மெக்கல்லம் 150-க்கும் மேல் ஸ்கோர் அடித்தார் என கேட்டேன். அந்த சமயம் எனக்கு கிரிக்கெட் குறித்தே அதிகமாகத் தெரியாது. ஆனால் அப்பாவுடன் பார்த்தேன். 2010ல் தான் விளையாட்டு குறித்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

2011 ஆம் ஆண்டில் இந்தியா உலகக்கோப்பை வென்றதும், நானும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும். ஒரு பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என கனவு காணத் தொடங்கினேன். அதுவே எனக்கு கிரிக்கெட் அகாதெமிக்கு சென்று பயிற்சி எடுக்கத் தூண்டியதாக தனது நேர்காணலை முடித்தார் திலக் வர்மா.

இதையும் படிக்க: விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனைகளை முறியடித்த கே.எல். ராகுல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com