விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... சாதனை நிகழ்த்துவாரா ரோஹித் சர்மா?

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல்லை எட்டவிருக்கிறார்.

News image

ரோஹித் சர்மா - படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்

Updated On :27 ஏப்ரல் 2025, 11:50 am IST

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல்லை எட்டவிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸின் முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமாகிய ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடக் கூடியவர்.

சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் இருந்து வந்த ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 2 அரைசதங்களை அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

மும்பையின் வான்கடே திடலில் இன்று மதியம் (ஏப்.27) லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது.

இந்தப்போட்டியில் ரோஹித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைய நிகழ்த்துவார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் கிறிஸ் ஜெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள்

1.கிறிஸ் கெயில் - 357 சிக்ஸர்கள் (மே.இ.தீ.வீரர்)

2. ரோஹித் சர்மா - 295 சிக்ஸர்கள் (இந்தியர்)

3. விராட் கோலி - 285 சிக்ஸர்கள் (இந்தியர்)

4. எம்.எஸ்.தோனி - 260 சிக்ஸர்கள் (இந்தியர்)

5. ஏபிடி வில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள் (தெ.ஆ.வீரர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.