வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

14 வயதில் சதம் விளாசி வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசல்...

News image

வைபவ் சூர்யவன்ஷி - படம் | @IPL

Updated On :28 ஏப்ரல் 2025, 10:40 pm IST

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி சாதனை படைத்தார். அவர் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 சிக்ஸர்கள் அடங்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது.

தொடக்க வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ரியான் பராக் தம் பங்கிற்கு அதிரடியாக 32 ரன்கள் சேர்க்க அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. அதுமட்டுமல்லாது, ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது வீரராகவும் அவர் உள்ளார். இந்தநிலையில், 14 வயதே நிரம்பியுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.