ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மீதமுள்ள போட்டிகளில் விலகுவதாக தெரிவித்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளதை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உறுதிபடுத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல், நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான அவர் தேர்வு செய்யப்படுவாரா என சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், அவர் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
மேக்ஸ்வெல் இந்தத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில், ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளை மட்டுமே அடித்துள்ளார். 13 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

100-ஆவது ஐபிஎல் போட்டியில் கேப்டனாக விளையாடும் ஷ்ரேயாஸ் ஐயர்..! தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



