ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸின் இலக்கு இதுதான்; ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸின் இலக்கு என்ன என்பது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

News image

ரிக்கி பாண்டிங் - படம் | பஞ்சாப் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :22 மார்ச் 2025, 3:53 pm IST

இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸின் இலக்கு என்ன என்பது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று (மார்ச் 22) தொடங்குகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறும் நிலையில், மற்ற அணிகள் தங்களது போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

பஞ்சாப் கிங்ஸின் இலக்கு என்ன?

ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கோப்பையை வெல்வதே பஞ்சாப் கிங்ஸின் உடனடி இலக்கு எனவும், பஞ்சாப் கிங்ஸ் அணியை சிறந்த அணியாக உருவாக்குவதே அடுத்த இலக்கு எனவும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸின் இலக்கு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது. இதுவரை விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிகளிலேயே மிகவும் சிறந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை உருவாக்கப் போகிறோம் என முதல் நாள் பயிற்சியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர்களிடத்தில் கூறினேன். அந்த பயணத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால், இந்த மாற்றம் ஒரே நாளில் வந்துவிடாது. அதனை வீரர்கள் தங்களது கடின உழைப்பால் உருவாக்க வேண்டும் என்றார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி மார்ச் 25 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் அதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.