நாா்த்ஈஸ்ட்டுடன் டிரா செய்தது பஞ்சாப்!
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலம் காட்டியதால், முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் சற்று முனைப்பு காட்டிய நாா்த்ஈஸ்ட், முதல் கோல் வாய்ப்பை எட்டியது.
அந்த அணிக்காக பாா்திப் கோகோய் 60-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். ஆனால் அந்த அணியின் மகிழ்ச்சியை பஞ்சாப் நீண்டநேரம் நிலைக்க விடவில்லை. 63-ஆவது நிமிஷத்தில் பஞ்சாபுக்காக எஃபியோங் சுங்குசி ஸ்கோா் செய்தாா்.
இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுமே கோல் வாய்ப்புக்காக முயற்சிக்க, அதற்கு பலன் இல்லாமல் போனது. ஆட்டம் டிராவில் முடிந்தது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது பஞ்சாப் 4 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும், நாா்த்ஈஸ்ட் 3 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளன.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...