எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நாா்த்ஈஸ்ட்டுடன் டிரா செய்தது பஞ்சாப்!

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

News image
- X | ISL
Updated On :9 மார்ச் 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலம் காட்டியதால், முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் சற்று முனைப்பு காட்டிய நாா்த்ஈஸ்ட், முதல் கோல் வாய்ப்பை எட்டியது.

அந்த அணிக்காக பாா்திப் கோகோய் 60-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். ஆனால் அந்த அணியின் மகிழ்ச்சியை பஞ்சாப் நீண்டநேரம் நிலைக்க விடவில்லை. 63-ஆவது நிமிஷத்தில் பஞ்சாபுக்காக எஃபியோங் சுங்குசி ஸ்கோா் செய்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுமே கோல் வாய்ப்புக்காக முயற்சிக்க, அதற்கு பலன் இல்லாமல் போனது. ஆட்டம் டிராவில் முடிந்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது பஞ்சாப் 4 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும், நாா்த்ஈஸ்ட் 3 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளன.