ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்! சென்னை போராடி தோல்வி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்! சென்னை போராடி தோல்வி!
AP
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி இருவரும் ஆரம்ப முதலே அதிரடியாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். பெத்தேல் 55(33 பந்துகள்), விராட் கோலி 62(33 பந்துகள்) ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து களம்கண்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க உள்ளே ஷெப்பர்ட் வந்தார். அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஷெப்பர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி காட்டிய ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா இணை ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டதால் ஆட்டம் இறுதிவரை பரபரப்பாக சென்றது. இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில் 94 ரன்கள் (5 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகள்) சேர்த்து லுங்கி இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பை 6 ரன்களில் நழுவவிட்டார்.

எனினும், கடைசி வரை போராடிய ஜடேஜா 45 பந்துகளில் 77 ரன்கள்(2 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகள்) சேர்த்தார்.

இறுதி ஓவரில், நோ-பால் வீசப்பட்டாலும், அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம், இந்த தொடரில் 9-ஆவது தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் தழுவியுள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com