
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா திருமலை கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசித்தார். தமது குடும்பத்தாருடன் திருப்பதி சென்று அவர் இன்று(மே 16) வழிபாடு நடத்தினார்.
ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் தலைவரான சஞ்சீவ் கோயங்காவின் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 7-ஆவது இடம்பிடித்துள்ளது.
அடுத்ததாக, மே 19 லக்னௌ நகரில் நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.