பெங்களூரு ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல் குறித்து ஐபிஎல் நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 58-ஆவது போட்டி நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி திடலில் ஆர்சிபி-கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது.
இந்தப் போட்டிக்காக விராட் கோலி ரசிகர்கள் வெள்ளை நிற ஜெர்ஸிக்களை அணிந்து வந்தார்கள்.
சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனால், கோலியை கௌரவிக்கும் பொறுட்டு வழக்கமான ஆர்சிபியின் சிவப்பு நிற ஜெர்ஸியை அணியாமல் வெள்ளை நிறத்தில் அணிந்து வந்தார்கள்.
ரசிகர்கள் கோலியின் ஆட்டத்தை பார்க்க மிகுந்த ஆவலில் இருந்தார்கள். ஆனால், மழைக் குறுக்கிட்டதால் டாஸ் சுண்டப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் சின்னசாமி திடலை விட்டுச் சென்றார்கள்.
சின்னசாமி திடலை வெண்மை நிறமாக்கிய ஆர்சிபி ரசிகர்களின் அன்பை விடியோவாக வெளியிட்டு ஐபிஎல் நிர்வாகம் பதிவிட்டுள்ளது. இந்த விடியோவை ஆர்சிபி, கோலி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டதால் கேகேஆர் தொடரிலிருந்து வெளியேறியதும், ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிராவிஸ் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஆர்சிபி ரசிகர்கள்! வலுக்கும் கண்டனம்!!

சந்தேகப்பட்டவர்களை சதத்தால் அமைதியாக்கிய விராட் கோலி; முன்னாள் கேப்டன் பாராட்டு!

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக... விராட் கோலி அதிரடி சாதனை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



