தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

'வந்தார்கள் வெளியேறினார்கள்': 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2020, 3:40 pm

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர். கிறிஸ் மோரிஸ் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.

வந்தார்கள் வெளியேறினார்கள்:

முகமது சிராஜ் வீசிய 2-வது ஓவரின் 3-வது பந்தில் திரிபாதி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

Story image

அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா முதல் பந்திலேயே போல்டானார்.

Story image

நவ்தீப் சைனி வீசிய 3-வது ஓவரில் கில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

Story image

ஆனால், டாம் பாண்டன் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

4-வது ஓவரை வீச மீண்டும் சிராஜ் வந்தார். அவர் இந்த முறை பாண்டன் விக்கெட்டை வீழ்த்தினார்.

Story image

இதனால், 14 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகள் என்ற மிகவும் மோசமான நிலையில் கொல்கத்தா இருந்தது. இதையடுத்து, கேப்டன் இயான் மார்கனும், அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் பாட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தனர். ஆனால், கார்த்திக்கும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திணறி வந்த பேட் கம்மின்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 17-வது பந்தில் சஹாலிடம் வீழ்ந்தார்.

இதையடுத்து, அவ்வப்போது பவுண்டரிகள் அடித்த மார்கன் அணியின் ஸ்கோரை 50-ஐ கடக்கச் செய்தார். ஆனால், வாஷிங்டன் சுந்தர் பந்தில் பவுண்டரி அடித்த அவரும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். கொல்கத்தா 57 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்த மார்கன் 34 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்ததால், இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் அதிரடி ஏதும் இல்லாமல் நிசப்தமாக முடிந்தது. கடைசி ஓவரில் மட்டும் குல்தீப் யாதவ் 1 பவுண்டரி அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.