உலக சாம்பியனுக்கு கரோனா: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றம்

இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கென்ட்ரிக்ஸ், கரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். 
உலக சாம்பியனுக்கு கரோனா: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றம்
Updated on
1 min read

போல் வால்ட் விளையாட்டில் இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கென்ட்ரிக்ஸ், கரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். 

அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது சாம் கென்ட்ரிக்ஸ், போல் வால்ட் விளையாட்டில் நடப்பு உலக சாம்பியனாக உள்ளார். 2017 மற்றும் 2019-ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதலிடம் பெற்றார்.  2016 ரியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாம் கென்ட்ரிக்ஸ் தங்கப் பதக்கத்தை நிச்சயம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கரோனாவால் தற்போது அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

சாம் கென்ட்ரிக்ஸுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டோக்கியோவில் உள்ள விடுதியில் சாம் கென்ட்ரிக்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

போல் வால்ட் போட்டியின் இறுதிச்சுற்று ஆகஸ்ட் 3 அன்று டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com