ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வி!

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
நிகத் ஸரீன்
நிகத் ஸரீன்
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் சீனாவின் வூ யூவிடம் தோல்வி அடைந்தார்.

பாட்மிண்டனில், ஆடவர் இரட்டையர் காலிறுதியில் சாத்விக்-சிராக் முன்னிலை பெற்றனர். ஆனால், மலேசியாவின் சியா-சோவுக்கு எதிராக ஆட்டங்களில் தோல்வியடைந்தனர்.

இது கடினமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர்கள் சிறப்பாக தொடங்கியதால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆடவர் ஒற்றையர் 16வது சுற்றில் லக்‌ஷ்யா சென், எச்.எஸ்.பிரணாய்யை எளிதில் வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com