/

பாரீஸ் ஒலிம்பிக்: ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பெண்கள் பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

News image
பாருல் செளத்ரி- கோப்புப் படம்
Updated On :3 ஆகஸ்ட் 2024, 2:39 am

DIN

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பெண்கள் பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்தியா சார்பில் விளையாடிய பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் தோல்வி அடைந்தனர்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பாருல் செளத்ரி, 15:10.68 விநாடிகளில் கடந்தார். இந்த சீசனில் செளத்ரியின் சிறந்த ஆட்டம் இதுவாகும். எனினும் அவர் 14வது இடத்தை மட்டுமே பிடித்தார்.

இதேபோன்று மற்றொரு வீராங்கனை அங்கிதா, 16:19.38 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். இதனால் இருவரும் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.