சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும்: அஸ்வின் நம்பிக்கை!

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
வினேஷ் போகத் / ரவிச்சந்திரன் அஸ்வின்
Updated On :13 ஆகஸ்ட் 2024, 6:58 am

DIN

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. போட்டியில் மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இந்தியாவுக்கு 71-ஆவது இடம் கிடைத்தது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடனேயே நிறைவு செய்துள்ளது.

மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த அவா், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு ஆளாகியிருந்தாா். அதில் பதக்கம் வென்று வரலாறு படைக்க இருந்த நிலையில், நிா்ணயிக்கப்பட்டதை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடர்ந்து, சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டில், விளையாட்டுக்கான சா்வதேச நடுவா் மன்றத்தின் தீா்ப்புக்காக அவர் உள்பட ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. இந்த நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் விளையாட்டுக்கான சா்வதேச நடுவா் மன்ற இன்று(ஆக. 13) தீர்ப்பளிக்கிறது.

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, அபிநவ் பிந்த்ரா உள்பட பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெண்கலம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும் உள்ளனர்.

இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும் என்று தான் உறுதியாக நம்புவதாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை அவர் இன்று(ஆக. 13) எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.