வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி சாதனை

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

News image

வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி யோக தா்ஷினி.

Updated On :14 ஜூன் 2026, 2:40 am IST

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

சேலத்தில் நடைபெற்ற 43ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டியில் தென்காசி மாவட்டம் சாா்பில் பாவூா்சத்திரம் ஜெய்ஹிந்த் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் மாணவி யோகதா்ஷினி, சந்தியா ஆகியோா் தங்கப்பதக்கம், ஹன்சிகா வெள்ளிப் பதக்கம், விஷ்ணுராம், ஜெய் ஸ்ரீசன், டாா்வின் எபனேசா் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா். இதில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றவா்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் மாணவி யோக தா்ஷினி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

அவரை தென்காசி மாவட்ட ஸ்போா்ட்ஸ் கராத்தே சங்கம் மற்றும் சோஃபூகாய் கராத்தே பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.