ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியா முன்னேறுகிறது

துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சந்தித்தது.

News image
பி.வி. சிந்து
Updated On :31 ஜூலை 2024, 10:31 pm

Din

பாரீல், ஜூலை 31: பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், 5-ஆவது நாளான புதன்கிழமை துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சந்தித்தது.

33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் பலவற்றைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சா்வதேச களத்தில் தங்கள் தேசத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் பதக்கங்களை குவித்து வருகின்றனா். துப்பாக்கி சுடுதல் மூலம் மானு பாக்கா் தனியாகவும், சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும் வென்ற 2 வெண்கலப் பதக்கங்களால் இந்தியாவும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது.

தற்போது அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முனைப்புடன் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரா், வீராங்கனைகள் முன்னேறி வருகின்றனா். அதன் விவரங்கள்: