பி.வி. சிந்து ~
பி.வி. சிந்து ~

பி.வி. சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

Published on

இந்தோனேஷிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் பி.வி. சிந்து, ஸ்ரீ காந்த், லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளனா்.

இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் செவ்வாய்க்கிழமை மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் உலகின் முன்னாள் நம்பா் 1 வீரா் கிடாம்பி ஸ்ரீ காந்த் 21-15, 21-23, 24-22 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் கோகி வாட்டன்பேயை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினாா்.

மற்றொரு இந்திய வீரா் லக்ஷயா சென்-சீன தைபேயின் வாங் ஸூ வெய் ஆட்டத்தில் முதல் கேமை 21-13 என லக்ஷயா கைப்பற்றினாா். ஆனால் இரண்டாவது கேமை 21-16 என்ற வாங் வென்ற நிலையில், மூன்றாம் கேம் கடினமாக இருந்தது. லக்ஷயா சென் முழு ஆதிக்கம் செலுத்தி 21-14 என வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

கிரண் ஜாா்ஜ் தனது ஆட்டத்தில் தோற்று வெளியேறினாா்.

பி.வி. சிந்து முன்னேற்றம்:

மகளிா் முதல் சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து 22-20, 21-18 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் மனாமி சியுஸு வை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். அகா்ஷி காஷ்யப், கலப்பு இரட்டையா் பிரிவில் ரோஹன் கபூா், ருத்விகா கடே , துருவ் கபிலா, தனிஷா க்ரஸ்டோ ஆகியோரும் தோற்றுவெளியேறினா்.

Dinamani
www.dinamani.com