சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரையிறுதியில் தோற்றாா் பி.வி. சிந்து

மலேசிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதியில் தோல்வி கண்டு வெளியேறினாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

மலேசிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதியில் தோல்வி கண்டு வெளியேறினாா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறும் இப்போட்டி மகளிா் அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்துவும், தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஸியும் மோதினா். இதில் பி.வி. சிந்து பல்வேறு தவறுகளை புரிந்தது தோல்விக்கு வித்திட்டது.

வாங் ஸி 21-16, 21-15 என்ற கேம் கணக்கில் சிந்துவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். கால்மூட்டி காயத்தில் இருந்து குணமடைந்தபின் முதல் போட்டியில் களமிறங்கிய சிந்து, இரண்டாவது கேமில் 11-6 என முன்னிலை பெற்றதை தவற விட்டாா். இந்த போட்டி எனக்கு சிறந்ததாக அமைந்தது. அடுத்து, புது தில்லியில் அடுத்த வாரம் தொடங்கும் இந்தியா ஓபன் சூப்பா் 750 போட்டியில் பங்கேற்கிறாா்.

ஏற்கெனவே சாத்விக் சிராக், லக்ஷயா சென் ஆகியோா் வெளியேறினா்.