தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வாட்ஸ் ஆப் மூலமாக கிரிக்கெட் சூதாட்டம்: தந்தை, மகன் கைது

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை, மகன் ஆகிய இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது...

News image
Updated On :20 ஏப்ரல் 2018, 5:55 am

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை, மகன் ஆகிய இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஐபிஎல்-ஐ முன்வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சென்னை வண்ணாரப்பேட்டை என்.என். கார்டன் தெருவில் உள்ள தேநீர் கடையில் வாடிக்கையாளர்களை ஆசை வார்த்தை கூறி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவது காவல்துறைக்குத் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் மாறுவேடத்தின் கண்காணித்தபோது சூதாட்டத்தின் செயல்பாடுகளைக் கண்டறிந்தார்கள். 

வாட்ஸ் ஆப் வழியாக எந்த அணியின் மீது ஒருவர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுகிறாரோ அவருக்கு அந்த அணி ஜெயித்தால் இரட்டிப்பு மடங்கில் பணம் கிடைக்கும். இதனால் இந்தச் சூதாட்டத்தில் பலரும் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. இதையடுத்து தேநீர் கடையில் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முகமது ஷெரீப், அவரது மகன் சையது அபுதாகிர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்கள்.  

அவர்களிடமிருந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காகப் பயன்படுத்திய செல்பேசியைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள். 

கைதான தந்தை, மகன் ஆகிய இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். பிறகு அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.