ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல்! சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!

இஸ்ரேல் தாக்குதல்களில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தல்...

News image

இஸ்ரேல் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொலை... (கோப்புப் படம்)

AFP

Updated On :2 ஏப்ரல் 2026, 4:49 pm

இணையதளச் செய்திப் பிரிவு

லெபனான் மீதான போரில், அந்நாட்டைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில், அல் மனார் எனும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அலி ஷோயப் கடந்த மார்ச் 28 அன்று கொல்லப்பட்டார்.

அலி ஷோயபின் கொலைக்குப் பொறுப்பேற்ற இஸ்ரேல் ராணுவம் அவர் ஹிஸ்புல்லாவின் ராத்வான் பிரிவில் செயல்பட்டு வந்ததாகக் குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், அல் மயாதீன் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஃபுதூனி மற்றும் அவரது சகோதரரும், ஒளிப்பதிவாளருமான முகமது ஃபுதூனி ஆகியோரைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் ராணுவம், அவர்களும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையில் இயங்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. நிபுணர்கள் வியாழக்கிழமை (ஏப். 2) அன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பத்திரிகையாளர்களைக் குறிவைத்துக் கொல்வதையும், பின்னர் அதற்கு நம்பத்தகுந்த ஆதாரத்தையும் வழங்காமல் அவர்கள் ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவதையும் இஸ்ரேல் தற்போது ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காஸா மற்றும் லெபனானில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் தாக்குதல்களில் 231 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதில், காஸாவில் மட்டும் 210 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

UN experts have urged that an international investigation be conducted into the killing of three Lebanese journalists by Israel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.