சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஐசிசி தரவரிசை: நெ.1 அஸ்வின்; நெ.2 ஜடேஜா!

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் முதல் இடத்தையும்...

News image
Updated On :25 ஜனவரி 2024, 12:07 pm IST

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் முதல் இடத்தையும் ஜடேஜா 2-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

சென்னை டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜடேஜா. இதையடுத்து அவர் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். தரவரிசையில் முதலிரண்டு இடங்களை இந்திய பெளலர்கள் பிடிப்பது அரிதான ஒன்றாகும். இதற்கு முன்பு பேடி - சந்திரசேகர் ஆகிய இருவரும் 1974-ல் முதலிரண்டு இடங்களைப் பிடித்தார்கள். இதற்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள் அஸ்வினும் ஜடேஜாவும். 

ஆல்ரவுண்டர் பட்டியலிலும் அஸ்வின் தனது முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இதில் ஜடேஜா மூன்றாம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

பேட்டிங்கில் ஸ்மித் முதல் இடத்திலும் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள். முச்சதம் அடித்த கருண் நாயர் 55-வது இடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.