ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜூனியர் துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் ருஷிராஜ்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருஷிராஜ் பரோத் (19), ஆடவர் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.

News image
Updated On :20 செப்டம்பர் 2016, 6:48 pm

DIN

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருஷிராஜ் பரோத் (19), ஆடவர் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) இந்தப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டியில் ருஷிராஜ் முதலிடம் பிடித்தார். செக். குடியரசின் லூகாஸ் ஸகெளமால் வெள்ளியும், ஆஸ்திரேலியாவின் செர்கெய் எவ்க்லெவ்ஸ்கி வெண்கலமும் வென்றனர்.
ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் ருஷிராஜ் தங்கம் வெல்வது இது முதல் முறையாகும். கடந்த மே மாதம் நடைபெற்ற முதல் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் அவர் 9-ஆவது இடம் பிடித்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், 6 போட்டியாளர்களைக் கொண்ட இறுதிச்சுற்றுக்கு 5-ஆவது நபராக ருஷிராஜ் தேர்வாகியுள்ளார்.
போட்டியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை 6 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களுடன் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது இந்திய அணி. 10 தங்கம் உள்பட 21 பதக்கங்களுடன் ரஷியா முதலிடத்தில் தொடருகிறது.
முன்னதாக, ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பிரதிக் போர்ஸ், அர்ஜுன் பாபுதா, பிரசாந்த் ஆகியோர் அடங்கிய அணி 1849.9 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. 5. மீ பிஸ்டல் பிரிவில் அன்மோல், நிஷாந்த் பரத்வாஜ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் அடங்கிய அணி 1600 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில், தில்ரீன் கில், கீதாலக்ஷ்மி தீக்ஷித், ஆஷி ரஸ்தோகி அடங்கிய அணி வெண்கலம் வென்றது.

உலகக் கோப்பையில் ஜிது ராய் உள்பட 3 பேர்
இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் ஜிது ராய், சஞ்சீவ் ராஜ்புட், மைராஜ் அகமது கான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில், ஆடவர் 50 மீ. மற்றும் 10 மீ. பிஸ்டல் பிரிவில் ஜிது ராயும், ஆடவர் 50 மீ. 3 பொசிஷன்ஸ் பிரிவில் சஞ்சீவும், ஆடவர் ஸ்கீட் பிரிவில் மைராஜும் களம் காணுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.