இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும்: உத்தப்பா விருப்பம்!

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதுதான் என் கனவு. இந்திய டெஸ்ட் அணியில்...
இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும்: உத்தப்பா விருப்பம்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இரு அணிகளுக்கு இடையே புணேவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த புணே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது. கொல்கத்தா வீரர்கள் ராபின் உத்தப்பா, கம்பீர் ஆகியோர் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். ராபின் உத்தப்பா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நேற்று உத்தப்பாவின் ஆட்டம் அதிரடியாக அமைந்தது. 26 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் அவர் அரைசதம் கடந்தார். 47 பந்துகளுக்கு 7 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் உத்தப்பா.

ஆட்டம் முடிந்தபிறகு உத்தப்பா கூறியதாவது:

தொடர்ந்து நன்றாக விளையாடவேண்டும் என்பதுதான் முக்கியம். அதை நான் செய்துவருகிறேன். இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதுதான் என் கனவு. இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவேண்டும்.

கனவுகள் எல்லாம் உள்ளன. ஒரேடியாக அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது. இன்று என்ன கிடைக்கிறதோ அதில் திறமையை வெளிப்படுத்தவேண்டும். உழைப்பு என்றும் வீண் போகாது என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. எனக்கான வாய்ப்பு நிச்சயம் வரும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com