அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி: 48 வயதில் மீண்டும் உலக சாம்பியனான ஆனந்த்!

உலக ரேபிட் செஸ் போட்டியில் மீண்டும் உலக சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்த், தன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று...

News image
Updated On :29 டிசம்பர் 2017, 7:06 am

எழில்

உலக ரேபிட் செஸ் போட்டியில் மீண்டும் உலக சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்த், தன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ரியாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 9-வது சுற்றில் ஆனந்த் வென்று ஆச்சர்யப்படுத்தினார். 15 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் உள்ளிட்ட மூவர் 10.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தார்கள். 

ஒரு தோல்வியும் அடையாமல் ஆறு வெற்றிகள், 9 டிராக்கள் மூலம் முதல் இடத்தைப் பிடித்தார் ஆனந்த். பிறகு டை பிரேக் முறையில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஆனார் ஆனந்த். டை பிரேக் போட்டியில் ரஷ்யாவின் ஃபெடோசீவை 1.5-0.5 என்கிற கணக்கில் தோற்கடித்ததால் சாம்பியன் பட்டம் ஆனந்துக்கு வழங்கப்பட்டது.

48 வயதில் மீண்டும் உலக சாம்பியன் ஆகியிருக்கும் ஆனந்த் இந்த வெற்றி குறித்துக் கூறியதாவது: அனைவருக்கும் நன்றி. மிதப்பது போல உணர்கிறேன். வீ ஆர் தி சாம்பியன்ஸ் என்கிற பாடல் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரிகள் அவ்வளவு உண்மையாக உள்ளன. இத்தருணத்தைப் பற்றி பிளிட்ஸ் போட்டிக்குப் பிறகு சொல்கிறேன் என்று கூறியுள்ளார். 

2003-ல் ரேபிட் செஸ் உலக சாம்பியன் ஆன ஆனந்த் தற்போது மீண்டும் உலக சாம்பியனாகியுள்ளார். பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தப் போட்டியில் நான் கலந்துகொள்வதாகவே இல்லை. ஏனெனில் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அப்படியொரு நிலை உண்டானது. மீண்டும் உலக சாம்பியன் ஆனதில் நல்ல உணர்வைத் தருகிறது. வார்த்தைகளால் விவரிக்கமுடியாத மகிழ்ச்சி. இது மிகவும் ஆச்சர்யமான முடிவு.

லண்டனில் போட்டியை நான் வெல்ல ஆசைப்படாவிட்டாலும் மிக மோசமாக விளையாடி கடைசி இடம் பிடித்தேன். இந்தப் போட்டியில் முதல் நாளன்று நான் மிகச் சிறப்பாக விளையாடினேன். ரேபிட் செஸ் போட்டிகளில் நான் ஆதிக்கம் செலுத்திய காலத்தை நினைவூட்டியது. அது எனக்கு மிகவும் நம்பிக்கையளித்தது. இப்போட்டியில் கார்ல்சனை வென்றதும் மிக முக்கியமானது. ரேபிட் மற்றும் பிளிட்ஸில் மிகவும் வலுவாக உள்ள வீரரை வென்றதில் மகிழ்ச்சியாக இருந்தது.

கடைசிக் கட்டத்தில் எனக்குப் பதக்கம் கிடைக்குமா என்றுகூட சந்தேகப்பட்டேன். ஆனால் பல எதிர்பாராத முடிவுகள் எனக்குச் சாதகமாக அமைந்தன. டை பிரேக் ஆரம்பமான பிறகு எனக்குச் சாதகமான சூழல்கள் ஏற்பட்டன. அப்போது அதிர்ஷ்டக் காற்று என் பக்கம் வீசியதாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.