இலங்கை டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல்

இலங்கை டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல்

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன்
Published on

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது முரளி விஜய்க்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை. இதையடுத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக தவன் சேர்க்கப்பட்டுள்ளார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com