50-ஆவது டெஸ்டில் களமிறங்கும் அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 50-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 50-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார்.
காலேவில் வரும் புதன்கிழமை தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும்போது 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார்.
இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் 7 முறை 10 விக்கெட்டுகளையும், ஓர் இன்னிங்ஸில் 25 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் அஸ்வின்.
50-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பது குறித்து அஸ்வின் கூறியதாவது: கடந்த காலங்களை திரும்பிப் பார்த்தால் ஏதாவது இலக்கு நிர்ணயித்து நான் விளையாடியிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. ஏனெனில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. அப்படியிருக்கையில் எந்த இலக்கையும் நிர்ணயிக்க முடியாது.
சர்வதேச கிரிக்கெட் இப்போது கடும் சவாலானதாக மாறியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு நாளும் நமக்கு சிறப்பானதாக அமைவது முக்கியமாகும். கடந்த கால சாதனைகளையே நினைத்துக் கொண்டிருந்தால், உங்களால் எதிர்காலத்தில் எதையும் சாதிக்க முடியாது.
முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள காலே மைதானம் நான் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மைதானம் ஆகும். நான் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய நேரத்தில் 10 விக்கெட் வீழ்த்தியதால் அது எனக்கு சிறப்புமிக்க தருணமாக அமைந்தது. இப்போது மீண்டும் காலேவில் விளையாடவிருப்பது முந்தைய இனிமையான நினைவுகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...