இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் இந்த ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகிறது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும். நடப்புச் சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் உரிய உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். அதேவேளையில் இலங்கை அணியானது, தனது முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. ஆகவே, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணியினர் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல இந்தப் போட்டியிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அதே அணியே இந்தமுறையும் இடம்பெற்றுள்ளது.