இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தர்மசாலா டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் நிதான ஆட்டம்; உணவு இடைவேளையில் 64/1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளான இன்று, மதிய உணவு இடைவேளை வரை...

News image
Updated On :26 மார்ச் 2017, 7:54 am

DIN

தர்மசாலா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளான இன்று, மதிய உணவு இடைவேளை வரை இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹிமாசல பிரதேசம் தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 300 ரங்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 111 ரன்னில் அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் மாத்யூ வடே அரைசதம் கடந்தார்.

இந்திய தரப்பில் அறிமுக வீரரான குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு ஓவர் மட்டும் விளையாடி ரன் கணக்கை தொடங்காமல் இருந்தது.இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகிய இருவரின் கட்டுப்பாடான நேர்த்தியான பந்துவீச்சின்  காரணமாக துவக்க ஜோடியால் விரைவாக ரன் எடுக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 21 ரன்னாக இருக்கும்போது முரளி விஜய் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து புஜாரா களம் இறங்கினார். இந்திய அணி இரண்டாவது நாள் மதிய உணவு இடைவேளையின் போது  ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 31 ரன்னுடனும், புஜாரா 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.