அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

என் நாடுதான் முக்கியம்: ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்டின் டூ பிளிசிஸ்!

ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம் பிடித்திருந்த தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டு பிளிசிஸ்

News image
Updated On :7 மே 2017, 9:59 am

DIN

மும்பை: ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம் பிடித்திருந்த தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டு பிளிசிஸ் அந்த அணியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் டூ பிளிசிஸ் இடம்பிடித்திருந்தார். அந்த அணியில் ஐ.பி.எல் விதிகளின் படி ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், டான் கிறிஸ்டியன், இம்ரான் தாஹிர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடி வருகின்றனர். எனவே டு பிளிசிஸ்-க்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி இருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் வரும் ஜுன் 1-ஆம் தேதி துவங்கி 18-ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இந்த ஒரு நாள் போட்டிகள் மே 4-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாமானது தற்போது தென்ஆப்பிரிக்காவில் துவங்கியுள்ளது. புனே அணியில் இடம் இல்லாதா காரணத்தால் தென்ஆப்பிரிக்கா தேசிய அணியில் இணைய டு பிளிசிஸ் முடிவு செய்துள்ளார். இதனால் புனே அணியில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று தகவலாக தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.